search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர்கள் கைது"

    குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய 3 என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூர் தெற்கு நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 34). இவர் தேவன்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ஏட்டு விஜயகுமார், அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் வந்தனர். அவர்கள் திடீரென ஏட்டு விஜயகுமார் மீது மோதுவது போல் வந்ததால் அவர் விலகி சென்றார்.

    பின்னர் இதுபற்றி கேட்டபோது 3 வாலிபர்களுக்கும், ஏட்டுவுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் திடீரென அருகே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ஏட்டு விஜயகுமாரை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது விஜயகுமாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    காயமடைந்த ஏட்டு விஜயகுமார், மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஏட்டுவை தாக்கியது மாளிகைமேட்டை சேர்ந்த சரண்ராஜ் (வயது 26), விஜயகுமார் (27) மற்றும் காரகோட்டை மேலகாட்டை சேர்ந்த அருள்பிரசாத் (26) என்று தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததும் தெரியவந்தது. பிறகு அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    சென்னை அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக என்ஜினீயர்கள் 2 பேர் கைதாகினர். #Chennai #Buildingcollapse
    சென்னை:

    சென்னை அருகே தனியார் மருத்துவமனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில்  புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட் டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது.  மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.

    இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.   தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு  (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது.  30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் 16 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும் சேர்க்கப்பட்டனர்.  ஆபத்தான நிலையில் இருந்த மோகன், ராஜன், சந்தோஷ் ஆகிய  3 தொழிலாளர்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததால் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.


    இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. சரிந்த ராட்சத இரும்பு சாரங்களை எந்திர கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்தார்கள்.  ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
    விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட  நிறுவனம்  மீது அலட்சியமாக செயல்பட்டது  உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த  விபத்தால்  அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    கட்டிட விபத்து நடந்த இடத்தை  சுகாதாரத் துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமிஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #Chennai #Buildingcollapse
    மருத்துவமனை கட்டிட சாரம் சரிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். #hospitalbuildingcollapses

    சென்னை:

    சென்னை அருகே தனியார் மருத்துவ மனையின் புதிய கட்டுமானப் பணியின்போது சாரம் இடிந்து விழுந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் பலியானார். 33 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    சென்னையை அடுத்த பெருங்குடி கந்தன்சாவடி கோவிந்தராஜ் நகரில் கோவையைச் சேர்ந்த ஜெம் குரூப் சார்பில் புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதே வளாகத்தில் பிரமாண்டமான ஜெனரேட்டர் அறையுடன் கூடிய 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

    இதற்காக 10-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு இதன் மேல் ராட்சத இரும்பு சாரம் கட்டப்பட்டு இருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை திடீரென்று இரும்பு சாரம் சரிந்து சுற்றுச் சுவர் மீது விழுந்தது. மருத்துவமனை எதிரில் உள்ள 2 வீடுகள் மீதும் இரும்பு சாரம் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன.

    இரும்பு சாரம் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்..



    பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு (23) என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார். அவரது பிணம் உடனடியாக மீட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனையில் 16 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 11 பேரும் சேர்க்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மோகன், ராஜன், சந்தோஷ் ஆகிய 3 தொழிலாளர்களுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்ததால் முதல் உதவி சிகிச்சை பெற்று திரும்பினார்கள்.

    இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. சரிந்த ராட்சத இரும்பு சாரங்களை எந்திர கட்டர்கள் மூலம் வெட்டி எடுத்தார்கள். ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதில் கட்டுமான பணியை மேற்கொண்ட நிறுவனம் மீது அலட்சியமாக செயல்பட்டது உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    உடனடியாக என்ஜினீயர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கட்டிட விபத்து நடந்த மருத்துவமனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இந்த விபத்தால் அங்கு வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    கட்டிட விபத்து நடந்த இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன், மாநில பேரிடர் மீட்பு கமி‌ஷனர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். #hospitalbuildingcollapses

    ×